ஒருமன்னன் எப்படி இருக்க வேண்டும்
ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை, பெரும ! எமக்கே ; மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய், பெரும! நின் ஒன்னா தோர்க்கே- அவ்வை மூதாட்டி
மன்னனே! நீ, பாகனால் அழைத்துச் செல்லப்பட்டு நீர்த்துறையில் படிந்திருக்கும் யானை, அதன்மீது ஊர்ந்துவந்து அதன் கொம்புகளைக் கழுவும் சிறார்களுக்கு அடங்கிக் கிடப்பது போல எம்போன்ற பாணர்க்கும் புலவர்க்கும் இனிமை தருபவன். ஆனால் பகைவர்களுக்கோ மதம்பிடித்து பிளிறிக் கொண்டு வீதிகளில் சீற்றத்துடன் வலம்வரும் பட்டத்து யானை போன்றவன் நீ!
ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை, பெரும ! எமக்கே ; மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய், பெரும! நின் ஒன்னா தோர்க்கே- அவ்வை மூதாட்டி
மன்னனே! நீ, பாகனால் அழைத்துச் செல்லப்பட்டு நீர்த்துறையில் படிந்திருக்கும் யானை, அதன்மீது ஊர்ந்துவந்து அதன் கொம்புகளைக் கழுவும் சிறார்களுக்கு அடங்கிக் கிடப்பது போல எம்போன்ற பாணர்க்கும் புலவர்க்கும் இனிமை தருபவன். ஆனால் பகைவர்களுக்கோ மதம்பிடித்து பிளிறிக் கொண்டு வீதிகளில் சீற்றத்துடன் வலம்வரும் பட்டத்து யானை போன்றவன் நீ!